திருகோணமலையில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொலை
திருகோணமலை சிங்கபுரத்தில் வீடொன்றில் கர்ப்பிணி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைத்த அனாமதேய தகவலொன்றிற்கமைய குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர.
அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளதுடன் அவரைத் தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
Comments
Post a Comment