உயிரை பறித்த செல்பி மோகம்..!!!
ஒமானில் மஸ்கட் Ain Garziz பகுதியின் நீர் நிலையில் தவறி வீழுந்து இரு இலங்கை மாணவிகள் உயிரிழந்துள்ளதாக ஒமான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒமான் சலாலாவில் தனியார் கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் செய்னப் மற்றும் ருவனி தில்சாரா சமரவீர ஆகிய இரு மாணவியரும் பாறையொன்றின் மேல் ஷெல்பி எடுத்தபோது வழுக்கி விழுந்ததாகவும் நீண்ட போராட்டத்தின் பின் ஆழமான நீர்த் தேக்கப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்ட போதிலும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சனி இரு குடும்பங்களும் அப்பகுதிக்கு சுற்றுலா சென்ற வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ள போது இந்த விபத்து இடன்பெற்றுள்ளது.
Comments
Post a Comment